நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி, காலத்தின் தேவை கருதி…  மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்த மாபெரும் கையெழுத்தியத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அரசியல் மேடை அல்ல. முழுக்க முழுக்க மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை தொடங்கி இருக்கிறார்கள்.

இருந்தாலும் கூட இதை தொடங்கி இருப்பவர் யார் ?  என்ற கேள்விக்கு பதிலை மட்டும் சொல்லி நான் பேச தொடங்குகிறேன். என்ன செஞ்சிரும்  தமிழ்நாடு…  இவர்கள் என்ன பெருசாக பண்ணிவிட முடியும் ? ஒரு மாநிலம் அவ்வளவுதானே…  இந்தியா என்பது எவ்வளவு பெரிய ஒன்றியம் என்று பெருமை பிதற்றிக்  கொண்டு இருந்தவர்கள் மத்தியில்,

ஒற்றை செங்கலும், ஒற்றை வார்த்தையும் ஒன்றியத்தை இன்றைக்கு நடுங்க செய்திருக்கிறது. அந்த பெருமைக்குரிய மாண்புமிகு அமைச்சர் பேரன்பிற்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும்,  உரையாற்ற காத்திருக்கக்கூடிய சான்றோர் பெருமக்களுக்கும்,  வருகை தந்திருக்கக்கூடிய மாணவர் – மாணவிகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நான் சார்ந்திருக்க கூடிய திராவிட கழகத்தின் சார்பிலே அன்பு வணக்கம் என பேச  தொடங்கினார்.