கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,   தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ”பச்சை துண்டை தலையில் கட்டி நானும் ஒரு விவசாயி என்றும்,  நான் டெல்டாகாரன் என்று வசனம் பேசினார். தொட்டதற்கெல்லாம் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியதையும் நீங்கள் அறிவீர்கள். தற்போது  அவர் முதலமைச்சரான பின்னர்,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய் விடக்கூடாது என்று அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளையே குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து அவர்களை அடக்க நினைக்கும் கொடுங்கோல் முதலமைச்சராக  மாறிவிட்டார்.பொதுமக்களாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படித்தான் இந்த விடியா திமுக அரசு சிறுபான்மை மக்களை தந்திரமாக ஏமாற்றி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த 2 1/2 ஆண்டு காலங்களில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன நன்மை செய்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் ? உண்மையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய் வேஷம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் சில கேள்விகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் கேட்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.