அமெரிக்க நாட்டில் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெக்சாஸ் மாகாணத்தில் புத்தாண்டிற்கு முந்தைய நாள் நள்ளிரவு நேரத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதாவது, கடந்த 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அன்று நள்ளிரவு 11:55 மணியளவில் அந்த பெண்ணிற்கு முதல் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு நள்ளிரவு 12.01 மணியளவில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளுக்கான இடைவெளி ஆறு நிமிடங்கள் தான். எனினும், முதல் குழந்தை 2022 ஆம் வருடத்திலும், இரண்டாவது குழந்தை 2023 ஆம் வருடத்திலும் பிறந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இது, அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.