தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என அரசின் உதவிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களுக்கு ஓராண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

இதுவரை 30 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தற்போது அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கோவில்களில் சிலை கடத்தல் போன்ற நிகழ்வுகள் எதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பின் நடைபெறவில்லை. தற்போது அறநிலைத்துறை என் கீழ் இயங்கும் 2,500 கோவில்களில் திருப்பணிகள் வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.