தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவர் தற்போது தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறிக் கொள்ளும் ஏ.எல் சூர்யா நடிகை திரிஷா தன்னுடைய மனைவி எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, திரிஷா தான் என்னை முதலில் காதலித்தார். என்னுடைய காலில் விழுந்தார். நான் விஜயை பிடிக்காது என அவர் அம்மாவிடம் கூறியிருக்கிறேன்.

பீமா படப்பிடிப்புக்கு த்ரிஷாவை அழைத்து சென்றதே நான்தான். நான் த்ரிஷாவின் கணவர். அவர் என்னுடைய மனைவி. நான் என்னுடைய மனைவியை திட்டுவேன். எனக்கும் அவருக்கும் பந்தம் இருக்கிறது. நடிகர் விஜயின் சுண்டுவிரல் கூட த்ரிஷா மீது படக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய்யை மிகவும் மோசமான வார்த்தைகளிலும் திட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் ஏ.எல் சூர்யாவை பலரும் கண்டித்து வருகிறார்கள்.