ராஜமவுலி டைரக்டில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. அதோடு அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்று இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக ஆர்ஆர்ஆர் படத்தின் 2ஆம்  பாகத்தை விரைவில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜமவுலி அளித்த பேட்டியில் “ஆஸ்கர் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 2ம் பாகம் எடுப்போம். அதற்குரிய பணிகளை வேகமாக தொடங்குவோம்” என்று அவர் கூறினார். இதனால் ஆர்ஆர்ஆர் படத்தின் 2ஆம் பாகத்திற்கான சூட்டிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.