துல்கர் சல்மான் ஜோடியாக “சீதா ராமம்” திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தான் மிருணாள் தாகூர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சீதா ராமம் திரைப்படத்துக்கு பின் மிருணாள் தாகூர் மார்க்கெட் உயர்ந்து, அவருக்கு பல்வேறு மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் வந்தது.

அதன்படி தமிழில் சூர்யாவின் 42வது படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு தமிழ் படத்தில் நடிக்கவும் பேசி வருகின்றனர். தெலுங்கில் நானி ஜோடியாக புது படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாக மிருணாள் தாகூர் உயர்ந்து உள்ளார்.