பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி ஆவார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய பாதுகாவலருடன் பைக்கில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது நடிகை அனுஷ்கா மற்றும் அவருடைய பாதுகாவலர் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.

இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் நடிகை அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலருக்கு 10,500 ரூபாயை மும்பை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். மேலும் அபராதம் செலுத்தியதற்கான ரசீதை மும்பை போலீசார் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.