திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நட்சத்திர ஏரியில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி ஏரியை சுற்றி இருக்கும் நடைபாதையை சீரமைத்தல், புதிய மின் விளக்குகள் பொருத்துதல், படகு சவாரி செய்வதற்காக அதிநவீன நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக சோதனை அடிப்படையில் அந்த நீரூற்றுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சீசன் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.