தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2015-ஆம் ஆண்டு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அந்த பெண்ணின் 3 வயது குழந்தையை முனியப்பன் தாக்கினார்.

இதனால் காயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் முனியப்பன் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் முனியப்பனுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.