திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் இருந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.