திரையுலகில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலிவுட் துன்புறுத்தல்கள் குறித்து மீடூ புகாரில் கூறி வருகிறார்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என பலர் மீது மீடுவில் புகார் கொடுக்கும் நிலையில், தற்போது நடிகர்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து ஓப்பனாக பேசி வருகிறார்கள். சமீபத்தில் தமிழில் மோனிஷா என் மோனலிசா போன்ற படத்தில் ஹீரோவாக நடித்த ரவி கிஷன் தன்னை ஒரு பிரபல நடிகை இரவு நேரத்தில் அழைத்ததாகவும் ஆனால் அவருடைய நோக்கம் தெரிந்து நான் அங்கு செல்லவில்லை எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது பிரபல பாலிவுட் இளம் நடிகரான சிவதாக்கரே ஒரு படத்தில் தான் கமிட் ஆகி இருந்தபோது அப்படத்தின் இயக்குனர் தன்னை மசாஜ் சென்டருக்கு அழைத்ததாகவும், அவரின் நோக்கம் தெரிந்து நான் அங்கு செல்லவில்லை எனவும் கூறினார். இதேபோன்று ஒரு பெண் இரவு நேரத்தில் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், தன்னுடைய வீட்டுக்கு இரவில் வந்து சென்ற நபர்கள் எல்லாம் தற்போது பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். நான் அந்த பெண்ணிடம் இரவு வர முடியாது என்று கூறியதால் உனக்கு சினிமாவில் இனி வாய்ப்பு கிடையாது என அவர் மிரட்டினாராம். ஆனால் அந்தப் பெண் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் தற்போது நடிகர்களும் தங்களுக்கு நேர்ந்த பாலிவுட் தொல்லைகள் குறித்து கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது