தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த தேர்வாளர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் தேர்வு செய்யப்படவில்லை என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். கட் ஆப் மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண் பெற்ற  தேர்வாளர்களை தேர்வு செய்தது ஏன் என்று டிஎன்பிஎஸ்சி பதிலளிக்கும் படி நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு தொடர்பான தகவல்களை மறைக்க முயற்சித்ததாக கூறியதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த வழக்கு விசாரணையானது செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி சரியான ஆவணம் ஆதாரங்களோடு முறையான விளக்கமளிக்க  தாக்கல் செய்ய தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.