சிவில் ஜட்ஜ் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இது காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளாக நடத்தப்படுகிறது. அதில் சில இடங்களில் மதியம் வழங்கப்பட வேண்டிய கேள்வித்தாள் காலையிலேயே வழங்கப்பட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் தயாரித்த கேள்வித்தாளை தான் விநியோகம் செய்ததாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.