வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளையும் 12 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.