தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக பல புகார்கள் இருந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவர்தான் தனது மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துள்ளார்.

காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  இந்த பயிற்சி மையம் பல மாவட்டங்களில் தேர்வு மையங்கள் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.