தமிழகத்தில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான தொடக்கக்கல்வி துணை பணியின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனராகத்தில் தொகுதி கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி ஆள்சேர்ப்பு டிசம்பர் நான்காம் தேதி TRB வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய ([email protected] / Toll Free No. 18004256753) இணைய தளத்தில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.