மிக்ஜாம் புயலின் வால் பகுதி சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் வந்துவிட்டது. இதனால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். உயிர் சேதம், பொருட்சேதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.