தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை பரமசிவன் வாழ்த்துரையும், தமிழ்நாடு உதவி பெறும் கல்லூரிகள் அலுவலர் சங்க மண்டல செயலாளர் எஸ்.பி.கணேசன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் சோமசுந்தரம், மேலாளர் சுடலைமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்கள்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டம் 1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான ஆவணத்தை தனியாக பராமரித்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதனையடுத்து தேவையற்ற, அவசர, கால அவகாசம் வழங்காமல் அறிக்கைகள் கோருவதை தவிர்க்க வேண்டும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு கூட்டங்களை தவிர்த்து களப்பணி ஆற்ற கள அலுவலர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு நவம்பரில் கோட்ட மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் தாய் கோட்டத்துக்கு கோட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.