தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கோவிலுக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை-க்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது, பாதகமான வானிலைக்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.