சுந்தர்.சி டைரக்டில் சென்ற 2021-ம் வருடம் வெளியாகிய படம் “அரண்மனை 3”. இப்படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் சுந்தர்.சி அரண்மனை -4 படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளார். அரண்மனை-4 படத்திலும் சுந்தர்.சி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு ராஷி கன்னாவும் அரண்மனை-4ல் இணைந்துள்ளார். இதை ராஷி கன்னா தன் சமூகவலைதளத்தில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் அரண்மை -4 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக இணைந்திருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் தமன்னாவும் அரண்மனை-4ல் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)