திமுகவிற்கு இடைத்தேர்தல் ஒன்றும் புதிதல்ல. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக பொது செயலாளர் துரைமுருகனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றார் என்று கூறினார். எனவே திமுகவுக்கு இடைத்தேர்தல் ஒன்றும் புதிது அல்ல. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என்று துரைமுருகன் தெரிவித்தார்.