தேசிய நெடுஞ்சாலையில் (Highway) பஸ் ஓட்டுநர்கள் இருவர், அதிக வேகத்தில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு (Bus Race) பஸ்ஸை ஓட்டிச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள், தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று நம்பித்தான் பயணம் செய்கிறார்கள். ஆனால், இந்த வீடியோவில் ஓட்டுநர்கள் தங்கள் உயிரையும், பயணிகளின் உயிரையும் பணயம் வைத்துச் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வீடியோவில், பஸ்ஸானது அதிவேகத்தில் சென்று, விபத்தை ஏற்படுத்தும் விதமாகக் கடுமையாக ஓவர்டேக் (Overtake) செய்வது தெளிவாகத் தெரிகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வேலையைச் செய்வதை விட, வீம்புடன் உயிரை வைத்துப் போட்டி போடுவது போலவே காட்சி இருந்தது.
Bus driver should be arrested
— Kreately.in (@KreatelyMedia) November 22, 2025
இதைக் கண்ட பலரும், இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். “இவர்கள் எமராஜாவிடம் விரைந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும், “இது ஒரு கொலை முயற்சி (Murder Plan); ஓட்டுநர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள், இந்தச் செயலால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
