என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  இன்னைக்கு  மோடி ஐயா வந்த பிறகு திமுககாரங்க பணம் கொடுக்குறாங்க. பொங்கல் தொகுப்புக்கு பணம் அறிவித்திருக்கிறார்களா ?  அண்ணே எப்பவுமே திமுகவை பொருத்தவரைக்கும் அறிவிக்க மாட்டாங்க. எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்கணும்னு நினைப்பாங்க. நம்ம கேட்டதற்கு அப்புறம் உதயநிதி ஸ்டாலின் சொல்லுவார். எங்க அப்பா மகளிரை கைவிட மாட்டார், கட்டாயமாக கொடுப்பார். ஒரு 15 நாள் பிபி ஏத்துவாங்க.

மூத்த அமைச்சர்கள் தளபதி சகோதரிகளுக்கு பணம் கொடுக்காமல் பொங்கல் கொண்டாட மாட்டார், கட்டாயமாக பணம் கொடுப்பார். இந்த பில்டப் எல்லாம் கொடுத்துட்டு 20 நாள் கழிச்சு பணம் கொடுப்பான். பொங்கல் தொகுப்பு முதலில் பணம் அறிவிக்கவில்லை என்றாலும் கூட,  20 நாட்களில் பணம் வரதான் போகுதய்யா. இப்படி எல்லாம் பொய் சொல்லுவாங்க… இதெல்லாம் செட்டிங்…. 70 வருஷமா தாத்தா காலத்துல இருந்து பண்ணி பண்ணி இந்த அரசியலை நாம் பார்க்கிறோம்.

ஒருவேளை ஆயிரம் ரூபாயை கொடுத்துட்டாங்கன்னா நம் சகோதரி இந்த ஆயிரம் ரூபாய் எப்படி போய் வாங்கணும் ? ரேஷன் கடை முன்பு கைகட்டி நின்று,   திமுககாரன்  மிராசுதாரர், துரை பத்து மணிக்கு வருவார், அதுவரை  நின்னு….  அவனே ரிசர்வ் பேங்க்ல போய் பிரிண்ட் அடிச்சு,  அந்த பணத்தை எடுத்துட்டு வந்த மாதிரி பில்டப்  கொடுத்து,  அவங்க கொடுக்கிற ஆயிரம் ரூபாய்க்கு பத்தாயிரம் போட்டோ எடுத்து, 

ரேஷன் கடையில் ரெண்டு ரூபாய் அரிசிக்கு மஞ்சப்பை கொடுக்கிற மாதிரி….  32 ரூபாய் மோடி ஐயா இது,  ரெண்டு ரூபாய் இவங்களது. இந்த டிராமா எல்லாம் பண்ணி இந்த ஆயிரம் ரூபாய் இந்த கையில வாங்குனீங்கனா….  அந்த கைல புடிங்கிட்டு போயிடுவாங்க….  கரண்ட் பில் ஏத்தியாச்சு, சொத்து வரி ஏத்தியாச்சு, பால் விலை ஏத்தியாச்சு, தயிர் விலை ஏற்றி ஆச்சு, நீங்க தப்பி தவறி பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் தருவான் என வாங்கினீங்கன்னா….  இந்த கையில ரெண்டு நாளில் ஆயிரம் ரூபாய் காணாமல் போய்விடும் என விமர்சனம் செய்தார்.