குஜராத் மாநிலத்திலுள்ள சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமண ஏற்பாடுகள் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதாவது, ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமண சடங்குகள் நடந்து வந்தது. அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மணமகளை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து உடனே சுதாரித்துக்கொண்ட உறவினர்கள், திருமணம் நின்றுவிடக்கூடாது என்று பெண் வீட்டாரிடம் பேசி மணமகளின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்ய சம்மதம் வாங்கினர். அதன்பின் இறந்த மகளின் உடலை பதப்படுத்தி வைத்துவிட்டு திருமணத்தை முடித்தனர் பெற்றோர். அதனை தொடர்ந்து திருமணம் முடிந்ததும் தன் இறந்த மகளின் உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்குகள் நடத்தி முடித்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.