அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்பது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தந்தை ஒய்.ஜி.பார்த்த சாரதியால் துவங்கப்பட்டது ஆகும். இந்த அமைப்பு துவங்கப்பட்டு சுமார் 75 வருடங்கள் ஆகிறது. இந்த அமைப்போடு எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, சோ, லட்சுமி உட்பட பல கலைஞர்கள் பணிபுரிந்தனர். அதோடு ஜெயலிதாவின் தயார் சந்தியா இந்த அமைப்பின் நிரந்தர நடிகையாக இருந்தார்.

இந்த அமைப்பு நடத்திய வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு, கவுரம் ஆகிய நாடகங்கள் திரைப்படங்களாக தயாராகியது. அதன்படி தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வரும் சாருகேசி நாடகமும் திரைப்படமாகிறது. இதை அவரே இயக்குகிறார். இந்த நாடகத்தை திரைப்படமாக ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது. இதில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.