மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் இப்போது பாந்தரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக நடிப்பதன் வாயிலாக முதல் முறையாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை தமன்னா. முன்பே திலீப் நடிப்பில் ராம்லீலா என்ற நூறு கோடி வசூல் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இத்திரைப்படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் திலீப்பின் 148-வது படத்துக்கான பூஜை கேரளாவில் நடந்தது. இந்நிகழ்வில் பிரபல இயக்குனர் ஜோஷி, நடிகர் மனோஜ் கே.ஜெயன், நடிகர் ஜீவா, நடிகை பிரணிதா சுபாஷும் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது.. தங்கள் நிறுவனம் தயாரிக்கிறது என்பதால் ஜீவா இதில் கலந்துகொண்டாரா (அ) அவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த விபரம் எதுவும் வெளியாகவில்லை.