செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாங்கள் நாளொன்றுக்கு 13 ஆயிரத்து கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் 2600 கன அடி தான் திறந்துவிடுவோம்ன்னு சொல்லி இருக்கிறார்கள். அது போதாது என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். காவேரி மேலாண்மை வாரியத்திடம் கர்நாடக அரசை  சொல்ல வேண்டும். அதுவும் இல்லை என்றால் கோர்ட்டுக்கு போக வேண்டும் இதே வேலை தான்.

1.6.2023 முதல் 26.10.2023 வரை கர்நாடகம்  தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 140 TMC. ஆனால் அவர்கள் வழங்கியதோ 56.4 TMC.  ஆக பற்றாக்குறை 83.6 TMC  இதுதான் நிலைமை. குறைபாடு விகிதச்சாரம் நிலவை பார்த்தால் கூட,  13.03 TMC அதில் கூட 3.4 TMC  தான் கொடுத்திருக்கிறார்கள். நவம்பர் மாதம் குறைபாடு விகிதாச்சாரத்தில் கர்நாடகா தர வேண்டிய நீரின் அளவு, 16.44 TMC, அதுவும் இல்லை. இதுவரையில் இருந்த எந்த அரசும் எவ்வளவு முரண் பிடித்ததில்லை.

எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் அல்லது நாம் ஏதோ சலுகை கேட்கிறோம் என்று கருதுகிறார்கள்,  அதுவும் அல்ல. இந்த நாட்டினுடைய உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படிதான் இந்த நாட்டினுடைய மக்கள் எல்லாம் நடக்க வேண்டும். ஆனால் ஒரு சர்காரே அப்படி நடக்க மாட்டேன் என்று சொல்வது, ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என தெரிவித்தார்.