உங்க பேர்ல இப்படி எல்லாம் இருக்கு… பிரச்சனை இருக்கு… எனக்கு வேண்டிய ஆளு இருக்காரு… நான் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன.  உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று சொல்லி இருக்கேன். அப்படின்னு சொல்லி சொல்லி ஒவ்வொன்னா பேசி…. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு இடைத்தரவுகளாக பல பேரை வச்சிருக்காங்க.

CBI, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, இந்த மூன்று நிறுவனங்களுக்கும் இதே போல இதை தரகர்கள் இருக்கின்றார்கள். குறிப்பாக இன்னைக்கு அமலாக்கதுறையைச் சேர்ந்தவர்கள் தான் இதிலேயே அதிகமாக இடை தரகர்கள் வைத்திருக்கிறார்கள்.  இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டுவது,

பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொள்கிறார்கள். அதைத்தான் இப்போது நாங்கள் பத்திரிகை, ஊடகங்களில் பார்த்துள்ளோம். என்கிட்டயும் வந்தாங்க. கொஞ்ச  நாளைக்கு உங்க செல் நம்பரை மாத்திடுங்க.  ஊரைவிட்டே தலைமறைவா இருங்கன்னு சொன்னாங்க என தெரிவித்தார்.