சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அதிமுக எடுத்த முடிவு. போலியான வெற்றியை பெறுவதற்கு திமுக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு தான். சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது கட்சியின் முடிவு.

அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 5000 ரூபாய் கொடுக்கலாமே என்று கூறினார். தற்போது பொங்கல் பரிசாக அவர் 5000 ரூபாய் கொடுக்க வேண்டாம். 2500 ரூபாய் கொடுத்து இருக்கலாம் அல்லது 2500 ரூபாய் கொடுக்க முடியவில்லை என்றால் 1000 ரூபாய் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் கொடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர் என்று கூறினார்.