விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனைக்கு ஆட்கள் வந்திருந்ததால் நேற்று (ஜன. 30) வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.5 லட்சம், 2 சவரன் நகை, மொபைல் போன் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு. செய்துள்ளனர்.