
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா சுற்றுலாத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று தமிழக ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்த தமிழக அரசு இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது.
