மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மயுரேஸ்வரர் பகுதியில் முதன்மை நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில் அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கிய உணவில் பாம்பு ஒன்று கிடந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் அறிந்து பள்ளிக்கு நேரில் சென்ற பெற்றோர்கள் தலைமை ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர். சிகிச்சைக்கு பிறகு பள்ளி குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் ஒரே ஒரு மாணவருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பாம்பு கிடந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.