இந்தியாவின் பல்வேறு இடங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஆட்டங்களில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் முதல்முறையாக பாண்டியா சகோதரர்கள் நேரடியாக கேப்டன்களாக மோத இருக்கிறார்கள்.

அதாவது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணியின் கேப்டன் குருணல் பாண்டியாவும் நேரடியாக முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் கேப்டன்களாக மோதுகிறார்கள். குஜராத் அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதேசமயம் லக்னோ அணியில் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய வீரர்கள் போதிய அளவில் கை கொடுக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் இன்று பாண்டியா சகோதரர்களே கேப்டன்களாக நேரடியாக மோதுவதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை 3.30 மணி அளவில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.