விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடாசர்மா, சித்தி இட்னானி உள்பட பலர் நடித்திருக்கும் படம் “தி கேரளா ஸ்டோரி”. சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் படத்துக்கு  எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கடுமையாக சாடி உள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இதுகுறித்து அவர் கூறியதாவது “இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தடைசெய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது எனில் அதை நிச்சயம் ஏற்றுகொள்ளத்தானே வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர்த்து வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என்று நினைக்கிறன். அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள்தான் தீவிரவாதி என பேசி உள்ளார்.