பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அண்மையில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கியிருந்தார். இந்நிலையில் ருத்ரன் படத்தில் பணி புரிந்த பின்னணி கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்களுக்கு சம்பள பாக்கி தராமல் ஏமாற்றுவதாக தற்போது நடன ஏற்பாட்டாளர் ராஜ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சம்பள பாக்கி தொடர்பாக பெப்சி உறுப்பினர் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டபோது அவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று ருத்ரன் படத்தின் மேனேஜரிடம் சென்று கேட்டபோது உங்களால் முடிந்தால் ‌ ராகவா லாரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று கேட்டுப் பாருங்கள் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ருத்ரன் படத்தின் மேனேஜர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.