தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2003-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை ரமணா இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ரமணா திருமலை படத்தில் நடந்த ஒரு விஷயம் பற்றி கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது திருமலை படத்தில் முதலில் நடிகை நம்ரதா ஹீரோயினாக நடித்தாராம். நடிகை நம்ரதா தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி ஆவார்.

நம்ரதா எவ்வளவுதான் நன்றாக நடித்தாலும் இயக்குனர் ரமணாவுக்கு திருப்தியே இல்லையாம். இதனால் பல போராட்டங்களுக்குப் பிறகு ஜோதிகாவை திருமலை படத்தில் நாயகியாக கமிட் செய்துள்ளார் ரமணா. இந்த தகவலை விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் கூறிய ரமணா விஜயிடம் கூறாமல் விட்டுவிட்டார். விஜய் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த போது நாயகியை மாற்றிய தகவலை ரமணா கூறியுள்ளார். இதை கேட்டு டென்ஷனான  விஜய் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாராம். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாராம். மேலும் இந்த தகவலை இயக்குனர் ரமணா கூறியுள்ளார்.