பாலிவுட் சினிமாவில் பிரபலமான ‌ நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் 2.0 படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக தமிழில் நடித்துள்ளார். நடிகர் அக்ஷய் குமார் தற்போது படே மியான் சோட்டே மியான் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் சோனாக்ஷி சின்கா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. நடிகர் டைகர் செராப் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது திடீரென நடிகர் அக்ஷய் குமாருக்கு முழங்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்ஷய் குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.