மலையாள சினிமா உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பாசில் ஜோசப். குஞ்சி ராமாயணம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். சென்ற வருடம் இவர் நடிப்பில் விபின்தாஸ் இயக்கத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பாசில் ஜோசப்-எலிசபெத் தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, எங்கள் குட்டி தேவதை வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி. அவள் ஏற்கனவே எங்கள் இதயங்களை திருடி விட்டாள். அவள் வளர்ச்சியையும் அவளிடம் இருந்து ஒவ்வொரு நாளும் நாங்கள் கற்றுக் கொள்வதை பார்க்க காத்திருக்க முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கின்றார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Basil ⚡Joseph (@ibasiljoseph)