உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ராஜ்பவனிலும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்படி செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய் நாகலட்சுமி, பாரா கிரிக்கெட் ஒலிம்பிக் வீரர் பொன்ராஜின் அம்மா ஞானசுந்தரி, திருநங்கை கிரேஸ் பானுவின் அம்மா ஹீனா உள்ளிட்ட 8 பேருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அதோடு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணிக்கும் அன்னையர் தின சிறப்பு விருதை ஆளுநர் ரவியும் அவருடைய மனைவியும் சேர்ந்து வழங்கினர். மேலும் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய மகளை ஒரு முன்னணி ஹீரோயினாக மாற்றிய நாகமணிக்கு சிறப்பு அன்னையர் தின விருது வழங்கப்பட்டுள்ளது.