தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் நடித்து வருபவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றார்கள். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் இருக்கின்றது. நித்யா மாதவரத்தை அடுத்த புண்ணியம் வீடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி. இவர்கள் இருவருக்கும் இடையே கார் நிறுத்துவதில் கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கின்றது.

இந்த நிலையில் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக மணியின் காரை நித்யா சேதப்படுத்தி இருக்கின்றார். இதனை அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை மணி ஆய்வு செய்ததில் தெரிய வந்திருக்கின்றது. இது பற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.