தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தற்போதைய சட்டசபை நிகழ்வுகள் மனவேதனையை அளிக்கிறது. சட்டசபையில் தனிநபர் துதி பாடும் போக்கு அதிகமாக உள்ளது.

மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய இடமாக இருக்க வேண்டிய சட்டசபை துதி பாடும் மன்றமாக மாறிவிட்டது. ஆட்சி என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லை. மக்களிடம் நல்லவர்கள் என்ற பெயரை வாங்க வேண்டும். அந்தப் பெயரை விஜயகாந்த் மட்டும் தான் வாங்கினார் என்று கூறினார்.