தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியினை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் தற்போது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அதன் பிறகு சினிமாவை விட்டு விலக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அதோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்பதையும் தன்னுடைய அறிக்கையில் விஜய் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் இதுவரை  76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளார்கள். இதனால் நடிகர் விஜயின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இத்தனை வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் பெயரில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ஒரு அறிக்கை வெளியான நிலையில் அது போலியானது என்று பின்பு தெரியவந்தது. வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நடிகர் விஜயின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக நடிகர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. மேலும் நடிகர் விஜய் தற்போது படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ள நிலையில் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வாக்களிப்பதற்காக இந்தியா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.