தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிய “வாத்தி” படம் கடந்த பிப்,.17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

அதோடு இப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படம் தொடர்பாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது. இதற்கு முன் தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.