திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ் பேசி வருகிறார்.

ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை பயன்படுத்தி 42 அதிகாரிகள் ஊழல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் தாலிக்கு தங்கம் வழங்காமல், தகரத்தை வழங்கியதால் நிறுத்தி விட்டோம். அதற்கு பதிலாக மாணவியருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அமைச்சர் வேலு கூறினார்.