இந்தியாவில் நடத்தப்படும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் போட்டி இருக்கிறது. ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ஐபிஎல் மேட்ச் நடந்து வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருப்பதோடு ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி செல்கிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இது ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு மற்றொரு வகையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பல பிரபலங்கள் வந்திருந்தார்கள். அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, நடிகர் சதீஷ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை பிந்து மாதவி, நடிகை மேகா ஆகாஷ், டிஜிபி சைலேந்திரபாபு போன்ற பலர் வந்திருந்தார்கள்.

இதேபோன்று நடிகை மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஷ் கல்யாண், இயக்குனர் சஞ்சய் பாரதி போன்றோரும் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்தார்கள். அதன் பிறகு நடிகர் ஜெயராமன் மற்றும் பிஜுமேனன் ஆகியோர் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக வந்திருந்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.