தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராதாரவி. இவர் சமீபத்திய பேட்டியில் தன்னைவிட வயதில் சிறியவரான நடிகர் அஜித்தை அஜித் சார் என்று ஏன் அழைக்கிறேன் என்ற காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் ஒரு கண் மருத்துவர். இவரிடம் 5000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் ஆபரேஷன் செய்வதற்கு நடிகர் அஜித் பணம் கொடுத்துள்ளார். இந்த தகவலை விஜய் சங்கர் நடிகர் ராதாரவியிடம் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஏற்பட்ட மரியாதையால் தான் நடிகர் அஜித் தன்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் அஜித் சார் என்று அழைக்கிறேன் என ராதாரவி கூறியுள்ளார். மேல் நடிகர் அஜித் மறைமுகமாக பலருக்கும் பல உதவிகளை செய்து வந்தாலும் அவர் செய்த உதவிகள் பற்றி சிலர் வெளியே சொன்னால் தான் தெரிய வருகிறது. உலகில் சிறந்த தானம் கண் தானம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட கண் ஆப்ரேஷனுக்கு நடிகர் அஜித் பணம் கொடுத்து உதவியது ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.