தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். இஞ்சி இடுப்பழகி என ரசிகர்களால் நடிகை சிம்ரன் அழைக்கப்பட்டார். ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன் தற்போது படங்களில் அம்மா வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜியுடன் சேர்ந்து யூத் படத்தில் ஆள்தோட்ட பூபதி நானடா பாடலுக்கு குத்தாட்டம் ஆடியது குறித்து பேசியுள்ளார்.

அதாவது அந்த பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடனமாட வேண்டாம் என பலரும் எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த எதிர்ப்பை மீறி சிம்ரன் விஜயுடன் சேர்ந்து குத்து பாட்டுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நல்ல வேலை என்னை எச்சரித்தவர்கள் பேச்சை நான் கேட்கவில்லை. இல்லையெனில் ஒரு சூப்பர் ஹிட் பாடலை மிஸ் பண்ணி இருப்பேன் என்று சிம்ரன் கூறியுள்ளார். மேலும் விஜய் மற்றும் சிம்ரன் ரசிகர்களின் பிடித்தமான ஒரு ஜோடி. டாப் ஹீரோயினாக நடித்த சிம்ரன் அப்போது ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.