செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி, இந்தியால பிக் பாக்கெட் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம் தான். அரசியல்வாதிக்கும் ஒரே சட்டம் தான். முதலமைச்சருக்கும் ஒரே சட்டம் தான். பிக் பாக்கெட் அடிக்கிறவனுக்கு சட்டம் கருப்பாவும் இல்ல. அரசியல்வாதிக்கு வெள்ளையாகவும் இல்லை.

இந்தியன் பினல் கோடு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் சரிசமமாக தான் கொடுத்திருக்காங்க. அந்த சட்ட அறிவு கூட சீமான் அவர்களுக்கு இல்லை. விஜயலட்சுமி அவர்களுக்கு நான் ஆதரவு தெரிவிச்சு…. அவங்களுக்கு பாதுகாப்பு அரணா இருக்கக்கூடிய என்னை தொடர்ந்து என்னுடைய வாட்ஸ் அப் கைபேசி எண்ணில்… சீமானுடைய பொறுப்பாளர்களும்,  சீமான் அவர்களின் ஆதரவான யூடியூப் சேனலில் இருந்தும் ரொம்ப வதந்திகளை பரப்புறாங்க.

பெண் என்று பாராமல் இழிவா பேசிட்டு இருக்காங்க. அவர்களுடைய நம்பர் எல்லாம் குறிச்சி இருக்கின்றோம். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகிறார்கள்.அதனால விஜயலட்சுமி அவர்களுக்கு பாதுகாப்பு கேட்டோம்,  எங்களுக்கு பாதுகாப்பு கேட்டோம். நாம் தமிழர் கட்சி  10 பேரை கூட்டிட்டு வந்து காமிச்ச ஜோக் எல்லாமே நான் 17 வயசுலயே பாத்துட்டேன்.

இவங்க காட்டுற ஜோக் எல்லாம் 17 வயசிலேயே நான் பாத்துட்டேன்.  அச்சுறுத்தல்,  அடியாட்களை கூட்டிட்டு வந்து மிரட்டுவதெல்லாம் நான் சின்ன வயசுலயே பார்த்துட்டு தான்…. இன்னைக்கு 35 வயசு வரைக்கும்…..  தமிழ்நாடு அரசியலில் பயணம் பண்ணி இருக்கேன். என் வரலாறு என்னன்னு நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு நல்லாவே தெரியும் என தெரிவித்தார்.