தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்றைய மின்நுகர்வு இருந்துள்ளது.

முன்னதாக கடந்த 10ஆம் தேதி அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது. நேற்றைய மின்தேவை எந்த தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். வருகிற ஏப்ரல் மாதத்தில் இது மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக உயரலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.